×

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஏற்கனவே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகஅளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4-க்கும் மேற்பட்ட அறைகள் முழுவதுமாக சேதமடைந்தது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மிகவும் மோசமான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chengamalapati ,Sivakasi ,Virudhunagar ,Virudhunagar district ,Chengamalapatti ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு